ராமநாதபுரத்தில் இருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ளது உத்தர கோச மங்கை. இங்குள்ள மங்களநாத சுவாமி கோவிலில் நடராஜருக்கு தனி சன்னதி உள்ளது. இங்கு வேறு எங்கும் காண முடியாத ஐந்தே முக்கால் அடி உயர மரகத நடராஜர் சிலை உள்ளது. மரகதத்தால் ஆன இந்த சிலை ஆண்டு முழுவதும் சந்தனக்காப்பு அலங்காரத்திலேயே இருக்கும். மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரைக்கு முந்தைய நாள் ஆருத்ரா தரிசனத்தின் போது, வருடத்தில் ஒரு நாள் மட்டும் மரகத வடிவத்தில், பச்சை வண்ணத்தில் நடராஜரை தரிசிக்கலாம்.
தினமும் மதியம் 12 மணிக்கு மேல் சிறப்பு வழிபாடு நடைபெறும். நடராஜர் கோவில் இருக்கும் இடத்திற்கு முன்பாக 3000 ஆண்டுகளுக்கு முந்தைய இலந்தை மரம் இன்றும் உள்ளது. இது இக்கோவிலின் தல விருட்சம். மேலும், இலந்தை மர அருகில் ஒரு லிங்கம் உள்ளது. இதில் ஒரு வரிசைக்கு 50 லிங்கம் என்ற கணக்கில் 20 வரிசைகளில் 1000 லிங்கங்கள் கொண்ட அமைப்பு உள்ளது. இப்படி வேறு எந்தக் கோவிலிலும் கிடையாது.
அரிய தகவல்கள்
ReplyDeletehttps://www.youtube.com/edit?o=U&video_id=MMMX6o8S_vQ
https://www.youtube.com/edit?o=U&video_id=MMMX6o8S_vQ
ReplyDeleteexcellent post https://www.youtube.com/edit?o=U&video_id=-ayAOu1QPnw
ReplyDelete