Monday, July 23, 2012

இந்து மதம்

ஒரே வழியைப் போதித்த புத்த மதத்தில்கூட ஹீனயானம், மஹாயானம் என்று இரு பிரிவுகள் உண்டு.

உலகமெங்கும் நன்கு பார்க்கையில், அந்த மதங்கள் பரவிய தேசத்திற்குத் தக்கவாறு பழைய, புதிய என்று மதங்கள் மாறுபட்டுள்ளதை நன்கு காண முடியும்.

கிறிஸ்துவ, இஸ்லாமிய மதங்களிலும் பிரிவினைகள் உண்டு. மற்ற மதங்களைப் பற்றி நாம் அதிகம் ஆராய்ச்சி செய்ய வேண்டாம் என்பதால் இங்கு அதிகம் எழுதவில்லை. 

அங்க, வங்க, கலிங்க என 56 தேசங்களாக பாரதம் பிரிந்திருந்ததாகக் கூறுவார்கள்

. சூழ்நிலைக்கேற்ப வழிபடும் தன்மைகள் இந்து மதத்தில் மாறுபாடு கொண்டது என்பதுதான் உண்மை

. வடதேசத்தில் சிவபெருமானை சிவலிலிங்க மாக வழிபடும்போது அனைவரும் தொட்டுப் பூஜிப்பார்கள்.திராவிட தேசத்தில் அனைவரும் தொட்டு வணங்கும் வழக்கம் இல்லை.

குளிர் மிகுந்த வடதேசத்தில் மேல் சட்டை அணிந்துதான் பூசாரிகள் பூஜை செய்வார்கள். திராவிட தேசத்தில் தைத்த உடை அணியும் பழக்கம் இல்லை. கட்டாயம் மேல் வஸ்திரம் அணியாமல் இடுப்பில் துண்டைக் கட்டிக் கொண்டுதான் பூஜிப்பார்கள்.

ஆக, அனுஷ்டானம் என்பது இயற்கைச் சூழ்நிலைக் கேற்ப இந்து மதத்தில் மாறுதல் பெற்றுள்ளது. 

மேலும், கடினமான வேள்வி, தவம் போன்றவற்றை ஆண்கள் செய்யலாம் என்றும்; மென்மையான பஜனை, கடினமில்லாத பூஜை வகைகளைப் பெண்களுக்கும் ஒதுக்கப்பட்டது

. அது சரீர தர்மமே தவிர, வேறு பெரிய காரணம் எதுவும் இல்லை.

சபையில் ஆண்- பெண் இருபாலருக்கும் அந்தக் காலத்தில் விவாதங்களில் சம உரிமை அளிக்கப்பட்டது.

2 comments: